நடிகை நயன்தாரா தற்போது சினிமாவை விட்டு விலக போவதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.
நடிகை நயன்தாரா
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் நடித்து, அதன் பின்னர் தனது மொத்த கவர்ச்சியையும் காட்டி அடுத்தடுத்து பட வாய்ப்பு பெற்று, தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளார். தற்போதும் பல படங்களை கைவசம் வைத்து பிசியாக நடித்து வருகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இப்படி சினிமாவில் பிசியாக இருந்த நயன்தாரா, கடந்த வருடம் இயக்குனர் விக்னேஷ் சிவனை கல்யாணம் செய்து கொண்டு, 4 மாதங்களில் இரண்டு ஆண் குழந்தைகளை வாடகை தாய் மூலம் பெற்றெடுத்தார். இப்படி குடும்ப வாழ்க்கையில் இறங்கிய நயன்தாரா சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் நடித்த அகிலன் திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது.
எஸ் ஏ சி-ன் புது சீரியல்., ஹீரோயின் யார் தெரியுமா? சூப்பர் கதையுடன் களமிறங்கும் ராதிகா சரத்குமார்!!
அதுமட்டுமின்றி அட்லீ இயக்கும் ஜவான் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை நயன்தாரா சினிமாவை விட்டு விலக போவதாக ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதற்கு காரணம் என்னவென்றால் தனது மகன்களை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பதற்காகவும், முழுவதும் அவர்களை பார்த்து கொள்வதற்காகவும் சினிமாவை விட்டு நயன் விலக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் தான் கமிட்டான படங்களை விரைவில் முடித்து கொடுக்க நயன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் என்று சொல்லப்படுகிறது .