இந்தியன் பிரீமியர் லீக் தொடர் 10 அணிகளுக்கு இடையே ஆண்டுக்கு ஒரு முறை நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடரில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள அணி எது என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. அவரது தலைமையில் சென்னை அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளது.
இந்த நிலையில் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் புதிய மைல் கல்லை எட்டி உள்ளது. அதாவது ஐபிஎல் தொடர் தற்போது டீக்கார்ன் என்ற புதிய அந்தஸ்தை அடைந்துள்ளது. ஐபிஎல்லின் பிராண்ட் மதிப்பு தற்போது 89,236 கோடியாக உள்ளது. அடுத்த ஆண்டு IPL தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு :
மும்பை இந்தியன்ஸ் – 725 கோடி.
சென்னை சூப்பர் கிங்ஸ் – 675 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 657 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 582 கோடி