ரூபாய் நோட்டுகளில் இந்த படத்தையும் உடனே சேருங்க.,முதல்வர் அதிரடி கோரிக்கை – அரசுக்கு பரிந்துரை!!

0

இந்திய கரன்சி நோட்டுகளில் காந்தி போட்டோவுக்கு பக்கத்தில் இந்த புகைப்படங்களையும் சேர்த்து அச்சடிக்க வேண்டும் என மாநில முதல்வர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

முதல்வர் விளக்கம்:

சுதந்திரத்திற்காக பாடுபட்ட, தலைவர்களில் ஒருவரான தேசத்தந்தை மகாத்மா காந்தியின் புகைப்படம், இந்திய ரூபாய் நோட்டுகளில் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில், சமீப தினங்களாக, அவரது போட்டோக்களுக்கு பதில் நேதாஜி புகைப்படத்தை இடம் பெறச் செய்ய வேண்டும் என மேற்கு வங்க அகில பாரத இந்து மகாசபா தலைவர் கோரிக்கை விடுத்தார்.

இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த ரூபாய் நோட்டு குறித்து முக்கிய பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதாவது, ரூபாய் நோட்டுகளில், காந்தியின் படத்திற்கு பக்கத்தில் லட்சுமி மற்றும் விநாயகர் போட்டோக்களை இடம்பெறச் செய்தால் நாடு செழிக்கும் என்று தெரிவித்தார். இந்த போட்டோக்கள் இடம் பெறும் ரூபாய் நோட்டுகளை விரைவில் அச்சடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசின் நடவடிக்கையால் டெல்லியில் காற்று மாசின் அளவு வெகுவாக குறைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். ரூபாய் நோட்டுகளில் காந்தி படங்களுக்கு பக்கத்தில், கடவுள் படங்களை இடம் பெறச் செய்ய வேண்டும் என முதல்வர் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here