டி20 உலக கோப்பை தொடரின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில், இந்திய அணி போராடி 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
டி20 உலக கோப்பை:
ஐசிசி சார்பாக தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்டு வரும் மகளிருக்கான டி20 உலக தொடரில், நேற்று அரையிறுதி போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், அலிசா ஹீலி மற்றும் பெத் மூனி முதல் விக்கெட்டுக்கு 52 ரன்கள் குவித்து அசத்தினார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இவர்களில், அலிசா ஹீலி 25 ரன்களில் வெளியேற பெத் மூனியும் அரைசதம் (54) அடித்து வெளியேறினார். இதனால், கேப்டன் மெக் லானிங் 49* மற்றும் ஆஷ்லே கார்ட்னர் (31) அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன் விளைவால், 20 ஓவர் முடிவில், ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் குவித்திருந்தது. சற்று கடினமான இலக்கை துரத்திய இந்திய அணியில், ஷஃபாலி வர்மா 9, மந்தனா 2, யாஸ்திகா பாட்டியா 4 என டாப் ஆர்டர் வீராங்கனைகள் அடுத்தடுத்து வெளியேறி ஏமாற்றினர்.
இதையடுத்து, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 52, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 43 என நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இவர்களும் ஒரு கட்டத்தில் வெளியேற, ரிச்சா கோஷ் 14, சினே ராணா 11, தீப்தி சர்மா 20* என அடுத்தடுத்து இந்திய அணி விக்கெட்டை பறிகொடுக்க, 20 ஓவரில் 8 இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து, 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்தது. இதனால், இந்திய அணி டி20 உலக கோப்பைக்கான இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்தது.