நாடு முழுவதும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் உள்ள ஷீரடியில் சுமார் ரூ.7500 கோடி மதிப்பினால பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கேற்ப ஏழைகளுக்கான பட்ஜெட்டையும் அரசு அதிகரித்து வருவதாக கூறியுள்ளார். அந்த வகையில் ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு இலவச சிகிச்சையும், சிறு குறு விவசாயிகளின் நலன் காக்க ரூ.2.60 கோடி மதிப்பிலான உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்கள் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக 100 நாள் ஊழியர்களே., சம்பள பிரச்சினைக்கு நடவடிக்கை? முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!!