இந்தியாவில் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க 100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் கீழ் குளங்கள், கால்வாய்கள் உள்ளிட்டவைகளை தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு, அதற்கான ஊதியம் ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் இந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் இருக்கிறது.
Enewz Tamil WhatsApp Channel
எனவே கடந்த சில வாரங்களாக பலருக்கும் ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து “தமிழ்நாட்டிற்கு 100 நாள் வேலை திட்டத்தில் வழங்க வேண்டிய ரூ.2697 கோடி நிலுவை தொகையை, உடனடியாக விடுவிக்க வேண்டும்.” என முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜுக்கு கடிதம் எழுதி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மணிப்பூர் கலவர விவகாரம்.., மீண்டும் இன்டர்நெட் சேவை தடை நீட்டிப்பு .., மாநில அரசு அதிரடி உத்தரவு!!!