இந்தியாவில் பா.ஜ.க.வின் ஆட்சிக்கு எதிராக உள்ள கட்சிகள் அனைத்தும் இணைந்து “இந்தியா” என்ற கூட்டணியை உருவாக்கி வருகிறது. இதையடுத்து வருகிற செப்டம்பர் 18ஆம் தேதி முதல் நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில், நமது நாட்டின் பெயர் “இந்தியா” என்பதற்கு பதிலாக “பாரதம்” என மாற்றம் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்தது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத போதும் கூட, பெயர் மாற்ற நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 9) டெல்லியில் நடைபெற்று வரும் G20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியின் முன் பெயர் பலகையில், நாட்டின் பெயர் “இந்தியா” என்பதற்கு பதிலாக “பாரத்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இது எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.