பிபா உலக கோப்பை 2026 தகுதி சுற்று கால்பந்து போட்டிகள் குவைத் நகரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் குவைத் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று (நவம்பர் 16) நடைபெற்றது. பலம் வாய்ந்த இந்திய அணி, ஆட்டத்தின் முதல் பாதியில் குவைத் அணிக்கு எதிராக ஒரு கோல் அடிப்பதற்கு கடுமையாக போராடியது. ஆனாலும், ஆட்டத்தின் முதல் பாதி கோலின்றியே முடிந்தது.
Enewz Tamil WhatsApp Channel
இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியில், ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் இந்திய வீரர் மன்வீர் சிங் கோல் ஒன்றை அடித்து அசத்தினார். இதற்கு பதிலடி கொடுக்க குவைத் அணி வீரர்கள் கடுமையாக போராடியும் பலன் கிடைக்கவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது.
கிரெடிட் கார்டு. தனிநபர் கடன்களுக்கான விதிமுறை மாற்றம்., ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை!!!