எதிர்நீச்சல் சீரியலில் இப்பொழுது, ஆதிரையின் திருமணம் விவகாரம் ஓடிக்கொண்டுள்ளது. குணசேகரன் பக்காவாக பிளானை போட்டு கதையை மாற்றி வருகிறார். அதாவது ஆதிரைக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து வைத்திருக்கிறார். இதற்கு ஜனனி, ரேணுகா கொந்தளித்து வருகின்றனர்.
ஆதிரைக்கு எப்படியும் கல்யாணத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்று முழு மூச்சில் இறங்கி வருகின்றனர். இப்படி இருக்க இந்த சீரியலில் நடிக்கும் முக்கிய நபரை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, குணசேகரனின் வில்லத்தனத்திற்கு டப் கொடுக்கும் அளவிற்கு இருக்கும், கதாபாத்திரம் என்றால் அது அரசு தான்.
சொத்தை எழுதி வாங்குவதில் இருந்து குணசேகரனுக்கு ஆப்பு வைக்கும் வரையில் பட்டு பட்டென்று பேசி விடுகிறார். அதனாலேயே ரசிகர்கள் மனதில் நிலைத்து விட்டார். ஆரம்பத்தில் இருந்தே சின்ன சின்ன சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இப்பொழுது கூட ஈரமான ரோஜாவே சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார். இவர் மனோரம்மாவின் ஆதர்ஷ் வித்யாலயா பள்ளியில் படித்தவராம். அந்த பள்ளியில் படித்ததால் தான் இந்த அளவிற்கு பெரிய நடிகராகி விட்டாராம். அதனை பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். மேலும் மஜ்னு என்ற படத்தில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.