நிறக்குருடு உள்ளவர்களுக்கும் இனி ஓட்டுனர் உரிமம் வழங்கலாம் – மத்திய அரசு தகவல்..!

0

உலகில் பல நாடுகளில், நிறக்குருடு உள்ளவர்களுக்கும் ஒட்டுனர் உரிமம் வழங்கப்படுவதை சுட்டிக்காட்டி இந்தியாவிலும் நிறக்குருடு உள்ளவர்களுக்கும் இனி ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசுக்கு கோரிக்கை..!

பார்வை குறைபாட்டில் பல்வேறு வகைகள் உள்ளன அதில் நிறக்குருடும் ஒன்று இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு நிறங்கள் சரிவர தெரியாது. இதனால் இத்தகைய குறைபாடு உள்ளவர்கள் ஓட்டுனர் உரிமம் பெற முடியாத நிலை இருந்தது. இதையடுத்து மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஓட்டுனர் உரிமம் வழங்கலாம்..!

அதையடுத்து மருத்துவ நிபுணர்களிடம் மத்திய அரசு ஆலோசனை கேட்ட போது நிறக்குருடு உள்ளவர்களால் நிறங்களை மட்டும் அடையாளம் காண முடியாதே தவிர மற்ற அனைத்து செயல்பாடுகளையும் சரியாக செய்ய முடியும். எனவே, குறிப்பிட்ட அளவிலான நிறக்குருடு உள்ளவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கலாம் என்று தெரிவித்தனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

மேலும் லேசான மற்றும் நடுத்தர அளவில் நிறக்குருடு உள்ளவர்களுக்கு ஒட்டுனர் உரிமம் வழங்குவதற்காக மோட்டார்வாகன விதிகளில் திருத்தம் செய்யப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here