ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நெருக்கமான உறவை ஏற்படுத்தி தருவது தான் திருமணம். கடைசி காலம் வரை தனது துணையுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று தான் அனைவரும் நினைப்பர். ஆனால் சிலருக்கு பாதியில் தனது துணையை இழந்து வாடுவர். அந்த வகையில் கேரளாவை சேர்ந்த ராதாகிருஷ்ண குருப், தனது மனைவி சமீபத்தில் இழந்து வாடி வந்துள்ளார். அவருக்கு ராஷ்மி, ரெஞ்சு என்ற 2 மகள்கள், ரஞ்சித் என்ற மகனும் உள்ள நிலையில், தனது தந்தையின் துக்கத்தை துடைக்கும் விதமாக ரெஞ்சு என்ற மகள் ஒரு காரியத்தை செய்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது ராதாகிருஷ்ண குருப்-க்கு தற்போது 62 வயது ஆகும் நிலையில், அவரின் வயதுக்கு ஏற்றார் போல் இருக்கும் 60 வயது மூதாட்டி, அதாவது கணவர் இறந்து விட்டதால் தனியாக வாழ்ந்து வரும் மல்லிகா குமாரி (60 வயது) என்ற பெண்ணை கல்யாணம் செய்து வைத்து அழகு பார்த்துள்ளனர். தனது தந்தையின் சந்தோஷத்திற்காக மகள் செய்த காரியம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.