இன்று தொடங்கும் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள இருந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
நான்கு பேருக்கு கொரோனா:
சென்னை மாமல்லபுரத்தில் இன்று 44 சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆரம்பமாக இருக்கிறது. இந்த விழாவை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தமிழகத்துக்கு வர இருக்கிறார். மேலும் அவருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டியில் கிட்டத்தட்ட 2000 போட்டியாளர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து பங்கேற்க உள்ளார்கள்.
இன்று போட்டி தொடங்க இருக்கும் நிலையில் தொடக்க கலை நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த கலைஞர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்