
சென்னையில் வேலைக்கு சென்ற லட்சக்கணக்கானோர் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்று இருந்தனர். இந்த விடுமுறை தினங்கள் நேற்றுடன் (நவம்பர் 13) முடிவடைந்ததால், அனைவரும் நேற்று இரவு முதல் சென்னைக்கு திரும்பி வருகின்றனர். இவர்கள இன்று (நவ.14) காலையில் விரைவாக அலுவலகம் செல்லும் வகையில் சென்னை மாநகர பேருந்து கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது இன்றும் (நவ.14) நாளையும் (நவ.15) சென்னையில் 3,167 மாநகர பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். இதன்மூலம் அலுவலகம், பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைந்து பயணங்களை மேற்கொள்வார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.