
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் முக்கிய இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில் தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக இன்று மட்டும் கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து இன்று கல்லூரிகளில் நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளும் விடுமுறை காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாகவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.