Home செய்திகள் சாதிவாரி கணக்கெடுப்பு: இந்த தேதிக்குள் முழு அறிக்கையும் தயார்? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட AP அரசு!!!

சாதிவாரி கணக்கெடுப்பு: இந்த தேதிக்குள் முழு அறிக்கையும் தயார்? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட AP அரசு!!!

0
சாதிவாரி கணக்கெடுப்பு: இந்த தேதிக்குள் முழு அறிக்கையும் தயார்? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட AP அரசு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த நவம்பர் 3ஆம் தேதி ஆந்திர பிரதேசத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன் தொடர்ச்சியாக கணக்கெடுப்பு நடத்துவதற்கான அரசாணையும் 2024 ஜன. 9 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதன்படி ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் கிராம பணியாளர்களால் ஜனவரி 19 முதல் 28 ஆம் தேதிக்குள் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். இதன்பின் மாநில சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, அதாவது பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் முழு அறிக்கையும் தயார் செய்ய வேண்டும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவுறுத்தி உள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here