இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது T20 போட்டி நேற்று (ஜனவரி 11) நடைபெற்றது. முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 158 ரன்களை குவித்தது. அதன்பிறகு விளையாடிய இந்திய அணி 159 ரன்கள் அடிக்க, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது .
இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச டி 20 வரலாற்றில் 100 வெற்றிகள் பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். தற்போது இச்சாதனை படைத்த ரோகித் சர்மாவுக்கு முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
துணை முதல்வராகிறாரா? உதயநிதி ஸ்டாலின்., கருணாநிதி பாணியில் நச்சுன்னு ஒரு பதில்!!!