உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கான ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி, வெண்கல பதக்கத்தை வென்றனர்.
7 முறையாக தோல்வி…!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 7-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்றுக்கான ஆட்டத்தில் இந்திய ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி, மலேசியாவின் ஆரோன் சியா மற்றும் சோ வூய் யிக் ஜோடியை எதிர்கொண்டது.
காலிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய ஜோடி இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தவறிவிட்டது. அதாவது விறுவிறுப்பாக நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் 22-20 18-21 16-21 என்ற கணக்கில் இந்திய ஜோடி, மலேசிய ஜோடியிடம் வீழ்ந்தது. இந்திய ஜோடி மலேசியா அணிக்கு எதிராக தோல்வி அடைவது 6 வது முறையாகும்.
அட்ராசக்க.. ரயில் பயணிகள் மொபைலில் வாட்ஸ் அப் இருந்தா போதும் – இனி அந்த தொல்லையே இல்லை!
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இரட்டையர் பிரிவில் ஜுவாலா குட்டா மற்றும் அஸ்வினி பொன்னப்பா ஆகியோர் வெண்கலப் பதக்கத்துடன் நாடு திரும்பினர். அவர்களுக்கு பின் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் 10 ஆண்டு கழித்து வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.