சீரியல் நடிகர் பப்லு, 2 வதாக திருமணம் செய்ய உள்ள சீத்தல் உடன் இணைந்து கொடுத்த பேட்டி ஒன்று, இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.
நடிகர் பப்லு:
தமிழ் சினிமாவில் அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் பப்லு பிருத்விராஜ். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலில், அப்பா கேரக்டரில் நடித்து வருகிறார். இவர், 24 வயது இளம் பெண்ணான ஷீத்தல் என்பவரை 2 வதாக திருமணம் செய்ய உள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
சேர்ந்து வாழ்ந்து வரும் இவர்கள் இருவரும்,சேர்ந்து ஒரு சில தனியார் youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்தும் வருகின்றனர். இந்த நிலையில், சீத்தலிடம் எப்படி உங்க அம்மாவை இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வைத்தீர்கள் என்று கேட்டபோது, என் அம்மாவுக்கு இதில் துளியும் விருப்பமில்லை. அது மட்டும் இல்லாமல் என் அப்பா, அம்மா இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
ஆதி -நிக்கி கல்ராணி எடுத்துக்கொண்ட ரொமான்ட்டிக் பிக்.., இணையத்தில் வைரல்!!
என் அம்மாவுக்கு நான் தான் எல்லாமே, இப்படி இருக்க என் அம்மா இதற்கு ஒத்துக்கொள்ளவே இல்லை.என சீத்தல் குறிப்பிட்டார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், சீத்தல் பப்லுக்காக இவ்வளவு தியாகம் செஞ்சு இருக்காங்களா? உண்மையிலேயே அவங்களுக்கு பெரிய மனசு தான் எனக் கமெண்ட் செய்து வருகின்றனர்.