பாக்கியலட்சுமி சீரியலில் இப்பொழுது ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்திருந்த காட்சிகள் அரங்கேறி வருகிறது. அதாவது ராதிகாவும், பாக்யாவும் ஒரே வீட்டில் தங்க போகிறார்கள். ஈஸ்வரிக்கு மகன் பாசம் இன்னும் விடவே இல்லை. எதுக்கு இவ்வளவு கஷ்டப்படணும், இனிமேல் நீ இங்கேயே இரு என்று சொல்கிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
எழில் சண்டை போட்டும் ஈஸ்வரி கேட்பதாக இல்லை. மேலும் ராதிகா வீட்டில் அவரது அம்மா உன் உரிமையை விட்டு கொடுக்காதே என்று கோபி வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். இதனால் குடும்பமே ஆடிப்போகிறது. ஏற்கனவே ராதிகா பாக்கியாவை பழிவாங்க பல சதிகளை செய்து கொண்டிருக்கும் நிலையில், இப்பொழுது வீட்டில் இருந்தபடியே அனைவரையும் ஆட்டி படைக்க போகிறார்.
ப்பா.., உறைய வைக்கும் அழகை காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தும் தர்ஷா., மயங்கி நிற்கும் வாலிபர்கள்!!
மேலும் ஈஸ்வரிக்கு ராதிகாவிற்கும் பிரச்சனைகள் வெடிக்க போகிறது. செல்லமாய் வளர்த்த கோபியை ராதிகா படுத்தும் பாட்டை பார்த்து விட்டு, ஈஸ்வரி கொந்தளிக்க போகிறார். மாமியார் மருமகள் சண்டை இதிலிருந்தே ஆரம்பிக்க போகிறது. மேலும் ராதிகா என் புருஷனை நான் என்ன வேணாலும் செய்வேன் என்று விடாப்பிடியாக இருப்பாராம். பாக்கியாவால் எதுவும் செய்ய முடியாமல் போக மீண்டும் வீடு நிம்மதி இழந்து போகுமாம்.