பாக்கியலட்சுமி சீரியலில் இப்பொழுது ராதிகா-பாக்கியா இடையே பனி போர் நடந்து வருகிறது. பாக்கியா தனியாக போராடி குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். குடும்பமே இப்பொழுது தான் ஓரளவிற்கு நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். அதற்கு இடையூறு தரும் வகையில் ராதிகா இப்பொழுது வீட்டிற்குள் வந்து விட்டார்.
ராதிகா வீட்டிற்கு வந்தவுடன் பாக்கியாவிற்கு ரூம் இல்லாமல் தனியாக ஹாலில் படுத்து தூங்கி கொண்டிருக்கிறார் பாக்கியா. அடுத்த கட்டமாக சீரியல் எப்படி நகர போகிறது என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.
இப்படி இருக்க இப்பொழுது, சீரியலில் முக்கிய பிரபலமாக விளங்கும் கோபி குறித்த முக்கிய தகவல் வைரலாகி வருகிறது. அதாவது சீரியலை விட்டு சதீஷ் விலக போகிறாராம். சில சொந்த காரணங்களால் இவருக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டதாகவும், வேறு வழியே இல்லாமல் சீரியலை விட்டு விலகியதாகவும் கூறியுள்ளார். இதனால் இவரது ரசிகர்கள் பலரும் ஷாக்காகியுள்ளனர்.
View this post on Instagram