தமிழ்நாட்டில் பெரும்பாலான பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதால் சுற்றுலா மற்றும் வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை தொடர்ந்து வருகிற மே 1 உழைப்பாளர் தினம் விடுமுறை நாள் வர உள்ளது. அதுவும் திங்கள் கிழமை வருவதால் சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறைகள் வழங்கப்பட உள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதன் காரணமாக ரயில்களின் முன்பதிவு முடிந்து பேருந்து பக்கம் பயணிகள் திரும்பி உள்ளனர். அதிலும் தனியார் ஆம்னி பேருந்துகள் பயண விலையை கூடுதலாக வசூல் செய்வதால் பெரும்பாலானவர்கள் அரசு பேருந்துகளை நம்பி உள்ளனர். அதேகேற்ப போக்குவரத்து கழக உயர் அதிகாரி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி வரும் 28ம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை மட்டுமின்றி பிற நகரங்களில் இருந்தும் கூடுதலாக பேருந்துகள் இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் கோயம்பேட்டில் இருந்து மட்டும் சுமார் 500 சிறப்பு பேருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்பதிவு அதிகரிக்க அதிகரிக்க கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.