இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நடைபெற உள்ளது. சமீபத்தில் இத்தொடருக்கான மினி ஏலம் பிரம்மாண்டமாக அரங்கேறியது. இந்நிலையில் எம்.எஸ்.தோனிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டனாக யார் செயல்படுவார் என்ற தகவல்கள் உலா வந்த நிலையில் தற்போது ஓர் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அதாவது, அடுத்த ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரிஷப் பந்த் கேப்டனாக இருப்பார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் எதிர்வரும் பதிப்பு தோனியின் கடைசி தொடராக இருக்க வாய்ப்புள்ளது. மேலும் தற்போதைய சென்னை அணியில் அவரது இடத்தை பிடிக்க எந்த வீரருக்கும் அனுபவம் இல்லை என்று கூறப்படுகிறது.