நடிகை மீனா தனது கணவர் இறந்ததற்கான காரணம் குறித்து முதன் முதலாக சமீபத்தில் நடந்த ஒரு ஊடக பேட்டியில் மனம் விட்டு பேசி, ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார்.
நடிகை மீனா:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறந்தவர் நடிகை மீனா. இவர், தமிழ் மற்றும் தெலுங்கில் இருக்கும் அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார், இவர் கடைசியாக ரஜினி நடித்த அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து கடந்த 2009ம் ஆண்டு வித்யா சாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் நைனிகா என்ற மகள் இருக்கிறார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இப்படி படங்களில் கவனம் செலுத்தி வந்த மீனாவுக்கு கடந்த ஜூன் 28ம் தேதி பெரிய சோகம் ஏற்பட்டது. அவருடைய கணவர் வித்யா சாகர் நுரையிரல் தொற்று காரணமாக எதிர்பாராத விதமாக இறந்து போனார். நல்லா போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் இடி விழுந்தது போல் மீனாவின் வாழ்க்கை மாறியது. அதன் பிறகு கொஞ்சம் காலம் சோசியல் மீடியாவில் தலை காட்டாமல் இருந்த மீனா சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு தனது கணவர் மரணம் குறித்து பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மாவின் இரண்டாவது கணவரை பார்த்துள்ளீர்களா?? மனுஷன் எவளோ அழகா இருக்காரு!!
அதாவது, என் கணவர் எல்லாரிடமும் அன்பாக பழகுவார், என்னுடைய நண்பர்கள் எல்லாரையும் அவருக்கு தெரியும், அதே போல் அவங்களுக்கு இவரை தெரியும். ஆனால் அவர் இறந்த பிறகுதான் உண்மையான நண்பர்களை நான் உணர்ந்தேன். என் அம்மாவால் மட்டுமே இந்த சம்பவத்தில் இருந்து மீண்டு வந்துள்ளேன். எனது கணவர் பெங்களூரில் இருக்கும் பொழுது, அவர் தங்கியிருந்த அப்பார்ட்மென்ட் அருகில் அதிக புறாக்கள் இருக்கும். அந்த புறாக்களின் எச்சத்தால் தான் வித்யா சாகருக்கு நுரையீரலில் புற்றுநோய் வந்ததாக உருக்கமாக கூறினார். இந்த பதிவு ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.