![இமிடேட் செஞ்ததால் வடிவேலு என்ன ஆள் வச்சு அடிச்சாரு.., உண்மையை சொல்லி கதறிய பிரபலம்!! இமிடேட் செஞ்ததால் வடிவேலு என்ன ஆள் வச்சு அடிச்சாரு.., உண்மையை சொல்லி கதறிய பிரபலம்!!](https://enewz.in/wp-content/uploads/2023/08/feature-dnf-768x432.jpg)
தமிழ் சினிமாவில் காமெடி மன்னனாக ஜொலித்த வடிவேலு நீண்ட நாள் சினிமாவில் நடிக்க கேப் விட்டு இருந்த நிலையில் இப்போது மீண்டும், நாய் சேகர், மாமன்னன் படங்கள் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த நேரத்தில் வடிவேலுவை பற்றி நடிகர் சுகுமார் சொன்ன விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நடிகர் சுகுமார், வடிவேலு மருத்துவமனையில் இருந்த போது அவரை பார்க்க சென்றேன்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அப்போது என்னிடம் வடிவேலு நீ பல கம்பெனில என்ன மாதிரி நடிப்பேனு சொல்றியாமேனு கேட்டாரு. அதற்கு நானும் ஆமாம் என்று சொன்னேன். உடனே ஒரு படத்துல என்ன மாதிரியே நடிச்சிருக்க என்று சொன்னாரு. அதற்கு நான் சூழ்நிலை அப்படி அமைஞ்சிருச்சு என்று சொல்ல, பின்னாடி இருந்து ஒருவர், என்னடா எதிர்த்து எதிர்த்து பேசுற என்று சொல்லி கீழே தள்ளி விட்டு அடி பின்னிட்டாங்க. நா எப்படியோ தப்பிச்சு வீட்டுக்கு வர என் மனைவி என்னாச்சு என்று கேட்க அவளிடம் நடந்த விஷயத்தை சொல்லி அழுதேன் என ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.