நாடு முழுவதும் கொரோனாவை அழிக்கும் தடுப்பூசியை கண்டுபிடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று கொரோனாவை முடிவுக்கு கொண்டுவர முயற்சியை தீவிரப்படுத்தவும், கொரோனா தடுப்பூசியை குறைவான விலையில் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் வற்புறுத்தியுள்ளார்.
வீடியோ கான்பரன்ஸ்
கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவியது. இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் ஒவ்வொரு நாடும் தீவிரமாக செயல்பட்டு வந்தது. ஆனால் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் இறுதியில் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்தது.
இந்நிலையில் நேற்று வீடியோ கான்பரான்ஸ் வாயிலாக ஜி -20 நாடுகள் ஒருங்கிணைந்த நிதியமைச்சர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தத்தக்கது.
நிர்மலா சீதாராமன்
நேற்று வீடியோ கான்பரன்ஸில் நிர்மலா சீதாராமன் கொரோனா நெருக்கடியை கட்டுக்குள் கொண்டு வருவதை குறித்து பேசினார். அக்கூட்டத்தில் கொரோனவை தடுக்கும் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்த வேண்டும். விரைவில் அந்த தடுப்பூசியை மக்களுக்கு வந்து சேரும் என்றும் கூறினார்.
கொரோனா தடுப்பூசியை குறைவான விலையில் விற்பனை செய்ய வேண்டும். இது மக்களுக்கு மிக பயனுள்ளதாக அமையும் என்றும் கூறியுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.