தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன்படி அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, வரும் ஆகஸ்ட் முதல் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூபாய். 1000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இத்திட்டத்தை தவிர தமிழகத்தில் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை, உயர்கல்வி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அரசின் உதவித்தொகை திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு வாய்ப்பில்லை.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!