ஆந்திரா சட்டசபைக்கு மொத்தமுள்ள 175 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடந்து முடிந்தது. இதில் பாஜக, ஜனசேனாவுடன் இணைந்து தெலுங்கு தேசம் கட்சி தேர்தலை சந்தித்தது. அதில் 135 இடங்களில் தெலுங்கு சேதம் மட்டும் வென்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த நிலையில் ஆந்திராவின் முதல்வராக நாளை பொறுப்பேற்கவுள்ள சந்திரபாபு நாயுடு ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார்.
அதில், அமராவதி தான் நம் தலைநகர். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லாமல் ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுப்போம். ஆந்திராவின் வணிக தலைநகராக விசாகப்பட்டினம் அமையும். 3 தலைநகரை ஏற்படுத்தியதாக மக்களுடன் விளையாட கூடாது. விசாகப்பட்டினத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். ராயலசீமாவையும் முன்னேற்றுவோம் என உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.