தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இத்துடன் அவ்வப்போது மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்களையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சுரேஷ் என்ற மாற்றுத்திறனாளி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அந்த வழக்கில் தமிழக அரசு எங்களது நலனுக்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் திரையரங்குகளில் எங்களுக்கான வசதிகள் இதுவரை ஏற்படுத்தவில்லை என கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி செய்து தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். மேலும் இதை செய்ய தவறிய திரையரங்குகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.