மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழாவை 2019ஆம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன்பின் 4 ஆண்டுகள் ஆகியும் எவ்வித கட்டுமான பணிகளும் நடைபெறாததால், நாடாளுமன்றத்தில் அண்மையில் விவாதத்திற்கு உள்ளானது. அப்போது 900 படுக்கை வசதியுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் மதுரையில் அமைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்த இருந்தார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கான டெண்டரை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. பங்கேற்க விருப்பமுள்ள நிறுவனங்கள் செப்டம்பர் 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு…, மருத்துவ கலந்தாய்வில் எத்தனை இடங்கள்?? முழு விவரம் உள்ளே!!