நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் கூல் சுரேஷ் படத்தை பார்க்க வந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் நான் தமன்னா ஆடிய காவாலா பாடலை பார்க்க தான் ஜெயிலர் படத்திற்கு வந்தேன். அந்த பாடலில் தமன்னா கிழிந்த ஆடையில் ஆடியது தனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதனால் அவருக்கு கிழியாத புதிய ஸ்கர்ட் ஒன்றை வாங்கி வந்துள்ளேன். இதனால் என்னை யாரும் தவறாக நினைக்க வேண்டாம். தமன்னா எனக்கு தங்கை போன்றவர். எனவே அவருக்கு பாதுகாப்பு கொடுக்கும் நோக்கத்திலேயே தான் இந்த புதிய ஆடையை வாங்கிட்டு வந்ததாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ரசிகர்கள் அதிகமாக இருப்பதால் , அவரது படத்தை எல்லாரும் விரும்பி பார்ப்பார்கள் என்று கூறியுள்ளார்.