உலக கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டம் முடிவடைந்த பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் வெறித்தனமாக வலை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
விராட் VS பாபர்
T20 வேர்ல்ட் கப் தொடருக்காக இந்திய அணி மட்டுமல்லாது ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் தீவிரமாக பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர். அதன்படி நேற்று கூட இந்தியா – ஆஸ்திரேலியா, இங்கிலாந்து – பாகிஸ்தான் ஆகிய அணிகள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. இதில் இந்தியா அணி 6 ரன்கள் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றியை சொந்தமாக்கி கொண்டனர். இந்த பயிற்சி ஆட்டம் முடிந்த பிறகும் T20 உலக கோப்பை தொடரில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியில் விராட் கோலி மற்றும் பாபர் அசாம் ஆகிய இருவரும் சேர்ந்து தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
T20 WC 2022: முதல் ஹாட்ரிக் படைத்த கார்த்திக் மெய்யப்பன்…, இலங்கையை மிரட்டி அசத்தல் சாதனை!!
இதற்கான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் உலகக்கோப்பை மீது உங்களுக்கு அவ்வளவு வெறியா?? கொஞ்ச நேரம் கூட ஓய்வெடுக்காமல் இப்படி தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டுமா? என கமெண்ட் செய்து வருகின்றனர். இதை வைத்துப் பார்க்கும்போது இவர்கள் இருவரும் மற்ற அணிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார்கள் என்று தான் தெரிகிறது.
Babar Azam, Mohammad Rizwan and Virat Kohli did a net session together! All three batting side by side#T20WorldCup pic.twitter.com/itIMkKsAgn
— ???? ?????? (@Babar4life) October 17, 2022