இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வெளியாகலாம் என தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து பல கட்சிகளும் கூட்டணிகளை இணைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி உடையவர்கள் என தெரிவித்துள்ளனர்.
![](https://enewz.in/wp-content/uploads/2024/02/1sesd.jpg)
இதில் ஆண் வாக்காளர்கள் 49.7 கோடியும், பெண் வாக்காளர்கள் 47.1கோடியும், மூன்றாம் பாலினம் 44, 044 பேரும், மாற்றுத்திறனாளிகள் 88.35 லட்சம் பேரும் உள்ளனர். அதன்படி இந்த ஆண்டு மட்டும் புதிய வாக்காளர்களாக 2.63 கோடி பேர் இணைந்துள்ளனர். இதை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது வாக்காளர்களின் எண்ணிக்கை 6 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.