நாட்டில் தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில் தற்போது ஐதராபாத் மாநிலத்தில் ஒரு மாத பச்சிளம் குழந்தை தொற்றில் இருந்து மீண்டுள்ளது.
கொரோனா வைரஸ்:
இந்தியாவில் சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மக்களை மிக கடுமையாக பாதித்து வருகிறது. மேலும் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையில் இளைஞர்கள் மிக அதிகமான அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த முதல் அலையில் முதியவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இளைஞர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
மேலும் அனைத்து உலக நாட்டிலும் தற்போது குழந்தைகளுக்கு வழங்க தடுப்பூசி ஏற்பாடு குறித்த பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐதராபாத் மாநிலத்தில் ஓர் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜூன் 1ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – மாநில முதல்வர் அறிவிப்பு!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதன்படி அந்த மாநிலத்தில் பெண் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அப்போது அவரது வயிற்றில் இருந்த குழந்தையை சுமார் 7வது மாதத்திலே வெளியே எடுத்தனர் மருத்துவர்கள். இந்நிலையில் அந்த பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக தனி ஐ.சி.யூ வார்டில் அந்த குழந்தை அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சுமார் ஒரு மாத சிகிச்சைக்கு பின்பு அந்த குழந்தை கொரோனாவில் இருந்து மீண்டுள்ளது.