தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் அண்மையில் அரசு பள்ளி ஆசிரியைகளுக்கான ஆடைக் கட்டுப்பாடுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறி இருந்தார். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதாவது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் / நகராட்சி / பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் கட்டாயமாக அடையாள அட்டை அணிய வேண்டும் என தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்புகளை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.