தமிழக மகளிர் உரிமைத் தொகை ரூ.1000.., இன்றைக்கு வெளியான சர்ப்ரைஸ் நியூஸ்!!

0
தமிழக மகளிர் உரிமைத் தொகை ரூ.1000.., இன்றைக்கு வெளியான சர்ப்ரைஸ் நியூஸ்!!
தமிழகத்தில் தகுதி வாய்ந்த ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதம் தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் பலரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்துள்ளனர். இதனால் மேல் முறையீடு செய்தவர்களில் 2 லட்சம் பேருக்கு இம்மாதம் முதல் உரிமை தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்த இருப்பதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.
தற்போது இதைத் தொடர்ந்து குடும்பத் தலைவிகளை மகிழ்விக்கும் வகையில் சூப்பரான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கு முன்பாகவே உரிமை தொகையை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அனைவருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை செலுத்தப்பட்டுள்ளது. இதனால் குடும்பத் தலைவிகள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here