தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தமிழ் மொழியின் தொன்மை, இலக்கண இலக்கியங்கள் மீது கொண்டுள்ள ஆர்வம் காரணமாக பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து தமிழ் மன்றங்கள் வைத்து தங்களது திறமையை வெளிக்காட்டி வந்தனர். இதனை அறிந்த தமிழக அரசு, மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதாவது, கடந்த 2022-2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற மானியக் கோரிக்கையில், அப்போதைய தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்பண்பாடுத்துறை தங்கம் தென்னரசு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
![](https://enewz.in/wp-content/uploads/2023/12/1st-kod.jpg)