![தமிழக ரேஷன் அட்டைதாரர்களே., டோக்கன் பெறாதவர்களுக்கு இந்த தேதியில் பொங்கல் பரிசு தொகுப்பு? முக்கிய தகவல்!!! தமிழக ரேஷன் அட்டைதாரர்களே., டோக்கன் பெறாதவர்களுக்கு இந்த தேதியில் பொங்கல் பரிசு தொகுப்பு? முக்கிய தகவல்!!!](https://enewz.in/wp-content/uploads/2024/01/FEA-60-696x418.jpg)
தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 பரிசுத் தொகையும் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி டோக்கன் கொடுக்கும் பணி முடிவடைந்து, நேற்று (ஜன. 10) முதல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
இந்த சூழலில் டோக்கன் பெறாமல் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு எப்போது? பொங்கல் பரிசு கிடைக்கும் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இது தொடர்பாக உணவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், “டோக்கன் பெறாத அரிசி அட்டைதாரர்களுக்கு வருகிற 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில், தங்களுக்குரிய நியாயவிலைக் கடைகளில் ரூ.1,000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.” என தெரிவித்துள்ளனர்.
TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு ஹேப்பி., தேர்ச்சி பெறுவதற்கான செம்ம சான்ஸ்? யூஸ் பண்ணிக்கோங்க!!!