தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு தையல், ஓவியம் உள்ளிட்ட திறனறிவு கல்வியை கற்பிக்க பகுதி நேர ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில், கடந்த 2012ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்டனர். இந்த ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என 11 ஆண்டு காலமாக பகுதி நேர ஆசிரியர் சங்க கூட்டமைப்பு பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் கிட்டத்தட்ட நிறைவேற்றிவிட்டதாக அரசு தரப்பில் கூறி வருகின்றனர்.
இதையடுத்து இன்னும் சில முக்கியமான வாக்குறுதிகள் நிலுவையில் இருப்பதாக பகுதி நேர ஆசிரியர் சங்க கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியவாறு, பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை (ஜன.23) நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வைத்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
‘கேப்டன் மில்லர்” கதை என்னுடையது., கூச்சமே இல்லாம திருடிட்டாங்க., எதிர்நீச்சல் பிரபலம் ஆதங்கம்!!!