![தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடிக்க புதிய கட்டுப்பாடுகள் அமல் – தடை விதித்து காவல் துறை உத்தரவு!! தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடிக்க புதிய கட்டுப்பாடுகள் அமல் – தடை விதித்து காவல் துறை உத்தரவு!!](https://enewz.in/wp-content/uploads/2022/10/feature-12-1.jpg)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில், பட்டாசு வெடிக்க புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தடை உத்தரவுகளை விதித்து, காவல்துறை டிஜிபி முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
காவல்துறை உத்தரவு:
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ளது. மக்கள் அனைவரும் இறுதி கட்டமாக, இந்த பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர். அந்த வகையில் தீபாவளி என்றாலே நமக்கு பட்டாசு தான் நினைவுக்கு வரும். தமிழகத்தில் இந்த பட்டாசுகள் வெடிக்க கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதன்படி, இந்த ஆண்டும் தமிழகத்தில் தீபாவளி அன்று, காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஆகிய 2 மணி நேரம் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும், என மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் கட்டுப்பாடு விதித்தது. இந்த உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும் நிலையில், மாநில டிஜிபி புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
IT துறையில் தொடரும் மந்தநிலை.., நிறுவனங்கள் எடுத்த அதிரடி முடிவு!!
அதாவது தடையை மீறி மோட்டார் சைக்கிள்களில் பட்டாசுகளை எடுத்து செல்லக்கூடாது என்றும், நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். மாநில போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கட்டுப்பாட்டில் சில தளர்வுகளை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.