ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்று விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது தவமாய் தவமிருந்து சீரியல். இதில் நான்கு பிள்ளைகளுடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார் மார்க்கண்டேயன். தான் ஆசையாக பெற்று வளர்த்த பிள்ளைகள் வளர்ந்து தனக்கே துரோகம் செய்வதை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத இவர் தற்போது அவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் பல செயல்களை செய்து வருகிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இப்படி விறுவிறுப்பான கதைக்களத்துடன் போய்க்கொண்டிருக்கும் இந்த நெடுந்தொடரில் அண்மையில் பாண்டி கேரக்டரில் நடித்திருந்த பிரிட்டோ மனோ விலகி இருந்தார். மேலும் அவருக்கு பதிலாக மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடித்து வந்த சுதர்சனம் பாண்டியாக கமிட்டாகினார்.
இப்படி இருக்கையில் தற்போது மீண்டும் இந்த சீரியலில் மலர் என்ற கேரக்டரில் நடித்து வந்த சந்தியா ராமச்சந்திரன் விலகி உள்ளார். இதனால் இவருக்கு பதிலாக இனி நடிகை சிவன்யா இனி மலராக நடிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இவர் செவ்வந்தி சீரியலில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.