எந்த ஒரு நியாயமான தீர்வு கிடைக்க போராட்டம் என்பதே ஆயுதமாக உள்ளது. அந்த வகையில் தெலுங்கானாவில் ஜெய்சங்கர் விவசாய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. அங்கு நீதிமன்றத்திற்கு தேவையான தேவையான கட்டிடத்தை கட்ட அந்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளதால், அதனை கண்டித்து பல்கலைக்கழகத்தின் ஏ பி வி பி மாணவர் அணியினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்றும் (ஜனவரி 24) போராட்டம் தொடர்ந்த நிலையில் போலீசார் மாணவ மாணவிகளை தடியடி அடித்து விரட்டினார். அப்பொழுது ஒரு மாணவி போலீசாரிடம் பிடிப்படாமல் தப்ப முயன்ற போது, அவரின் தலைமுடியை பிடித்தபடி பெண் போலீசார் ஸ்கூட்டரில் பயணித்தார். அப்பொழுது மாணவி நடுரோட்டில் தடுக்கி விழுந்தார். இதற்கு பலரும் தங்களது விமர்சனத்தை தெரிவித்து வரும் நிலையில், அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .
Enewz Tamil WhatsApp Channel
விரைவில் தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் 2024-2025…, பழைய ஓய்வூதியத் திட்டம் அமலாக்க வாய்ப்பு!!
View this post on Instagram