![மதுபானங்களின் விலையில் மோசடி., பணியாளர்கள் பணி நீக்கம் செய்து நடவடிக்கை? அரசு எச்சரிக்கை!! மதுபானங்களின் விலையில் மோசடி., பணியாளர்கள் பணி நீக்கம் செய்து நடவடிக்கை? அரசு எச்சரிக்கை!!](https://enewz.in/wp-content/uploads/2023/10/ff-31.jpg)
தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடைகளின் மூலம் அரசுக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. ஆனால் பொதுமக்கள் கூட்டம் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் இந்த டாஸ்மாக் கடைகள் இயங்க கூடாது என கட்டுப்பாடு உள்ளது. இப்படி இருக்கையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெருமளவு வருமானத்தை ஏற்படுத்தி கொடுக்கும் இந்த டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை அரசு குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களின் அசல் விலையை விட கூடுதலாக 10 ரூபாய் சேர்த்து விற்கப்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. இதையடுத்து கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்பட்டால் பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என அரசு அறிவித்துள்ளது. மேலும் 2 வது முறையாக கூடுதல் விலைக்கு விற்கப்படும் குற்றசாட்டுக்கள் எழும் பட்சத்தில் பணி நீக்கம் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மகளிர் ரூ.1,000 உரிமை தொகை திட்டம் ரத்து? என்ன காரணம்? உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!!!