தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜனவரி 23) நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், மாநில மகளிர் கொள்கைக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய கொள்கையின் படி, 19 வயது வரையில் உள்ள இளம் பெண்களுக்கான “கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா” திட்டத்தை விரிவுபடுத்த உள்ளனர். அதேபோல் பள்ளி, கல்லூரி பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்சிகள் வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு பெண்கள் உட்பட பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.