Home செய்திகள் தமிழகத்தில் முடிவுக்கு வந்த கொரோனா 3ம் அலை – சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!!

தமிழகத்தில் முடிவுக்கு வந்த கொரோனா 3ம் அலை – சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!!

0
தமிழகத்தில் முடிவுக்கு வந்த கொரோனா 3ம் அலை – சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!!
தமிழகத்தில் முடிவுக்கு வந்தது கொரோனா 3ம் அலை - சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலை முடிவுக்கு வந்து விட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கருத்து:

தமிழகத்தில் கொரோனா வைரஸின் உருமாறிய ஓமைக்ரான் பயங்கரமாக பரவியது. ஆனால், இந்த வைரஸ் கொரோனாவின் இரண்டாம் அலையின் போது பரவிய டெல்டா வைரஸ் போன்று மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், அண்மையில் தொடங்கிய கொரோனா வைரஸின் மூன்றாம் அலை பரவல் தமிழகத்தில் முடிவுக்கு வந்துவிட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தற்போது தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமையான இன்று, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், அடுத்த வாரம் அதாவது, பிப்ரவரி 19ம் தேதி மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளதால், அன்றைய தினம் தடுப்பூசி முகாம் நடத்தப்பட வாய்ப்பில்லை எனவும் அமைச்சர் மா. சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here