மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் சமீபத்தில் நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து இப்போது தமிழகம், புதுவையிலும் சட்டசபை கூட உள்ளது. அதன்படி தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.
![](https://enewz.in/wp-content/uploads/2024/02/1fgfsw-1024x614.jpg)
இதையடுத்து புதுச்சேரி மாநிலத்தில் வரும் 22ஆம் தேதி 15வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் காலை 9.45 மணிக்கு தொடங்க உள்ளதாக சபாநாயகர் செல்வம் அறிவித்துள்ளார். மேலும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்ய உள்ளார். இதில் மக்களுக்கு பயனுள்ள பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.