பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இப்பொழுது வளைகாப்பு நிகழ்ச்சியுடன் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. ஜீவா வீட்டை விட்டு வெளியேறிய பிறகு குடும்பமே சோகத்தில் மூழ்கி விட்டது. எப்படியாவது குடும்பம் மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்று தனம் போராடி வருகிறார்.
வளைகாப்பு விழாவில், குடும்பங்கள் அனைவரும் சந்திக்கும் வேளையில் ஏதாவது அற்புதம் நடக்குமா?? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். இப்படி இருக்க இப்பொழுது புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரவண விக்ரமுக்கு படவாய்ப்பு கிடைத்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
இவரும் சீரியலை விட்டு விலக வாய்ப்பு உள்ளது. ஏனெனில், தொடர்ந்து இன்ஸ்டா, யூடியூப் சேனல்களில் தனது திறமையை காட்டி கொண்டே தான் இருந்தார். இப்பொழுது அவருக்கு இப்படி ஒரு லக் அடித்து விட்டதால் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.