தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நாளை மறுநாளுக்குள் (ஏப்ரல் 29) கோடை விடுமுறை வழங்க வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
ஆனால் சில தனியார் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டுக்கான பாடத்திட்டத்தை கோடை விடுமுறையின் போது சிறப்பு வகுப்பு மூலம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக “அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கோடை விடுமுறையின் போது சிறப்பு வகுப்பு நடத்துவது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் அறிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு இந்த ஊதியம் வழங்க கூடாது., உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!
மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடும் பள்ளிகள் குறித்து பெற்றோர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவரிடம் புகார் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தி உள்ளார்.