தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மையை போக்க பிரபல தனியார் நிறுவனங்களின் வருகையை அரசு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் டிஜிட்டல் தொலைதொடர்பு துறையில் பிரபலமான அமெரிக்காவின் சிஸ்கோ நிறுவனம் சென்னையில் புதிய தொழிற்சாலை அமைக்க உள்ளது.
இந்த ஆலை சுவிட்சிங் நெட்வொர்க் மற்றும் ரவுட்டர் உள்ளிட்ட கணினி உபகரணங்களை உற்பத்தி செய்ய உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய உள்ளனர். இதன்மூலம் சுமார் 1,200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல்லின் மந்திரவாதியாக உருவெடுத்த தல தோனி…, ஜியோ சினிமா வெளியிட்ட வைரல் போஸ்டர் உள்ளே!!
இந்நிலையில் இந்தியா வந்துள்ள சிஸ்கோ நிறுவன CEO முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது சிஸ்கோ தொழிற்சாலை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் பேட்ஜ் தயாரிப்புகள் அடுத்த 12 மாதங்களில் வெளியாகும் என தகவல் தெரிவித்துள்ளார்.