![களைகட்டும் பொங்கல் விழா.. ஜல்லிக்கட்டு காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவுக்கு அனுமதி.. வெளியான முக்கிய தகவல்!! களைகட்டும் பொங்கல் விழா.. ஜல்லிக்கட்டு காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவுக்கு அனுமதி.. வெளியான முக்கிய தகவல்!!](https://enewz.in/wp-content/uploads/2024/01/jallikattu-ff-768x428.jpg)
தமிழ்நாட்டின் கலாச்சார விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை முதல் தென் மாவட்டங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தி பெற்றதால், போட்டியை நேரில் காண வெளிமாநிலம் மட்டுமல்லாமல் வெளிநாட்டிலிருந்தும் எண்ணற்றவர்கள் வருவார்கள். இந்த நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பாக ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது மதுரை உயர்நீதிமன்ற கிளையில், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் முறையை ரத்து செய்யக்கோரி பொதுநல வழக்கு ஒன்று போடப்பட்டது. தற்போது அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு, ஆன்லைனில் மட்டுமே காளைகளுக்கு முன்பதிவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இத்தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அன்னபூரணி படத்தில் இடம்பெற்ற அந்த வார்த்தை., சர்ச்சையில் சிக்க முக்கிய காரணம்., வெளியான அப்டேட்!!!