எதிர்நீச்சல் சீரியலில் இப்பொழுது ஆதிரையின் திருமணம் முடிவாகி இப்பொழுது நிச்சயம் வரை வந்து விட்டது. அதுவும் குணசேகரன் எஸ்கே-வை அசிங்கப்படுத்த பல திட்டங்களை போட்டு வருகிறார்.
ஆதிரைக்கு அருணை திருமணம் முடிப்பது போல பேசி விட்டு கரிகாலனை மாப்பிள்ளையாக்கி விடலாம் என்று யோசிக்கிறார். அதுமட்டுமின்றி எஸ்கே சற்றும் சளைக்காமல் சொத்தை ஆதிரையின் பெயரில் எழுதி வைக்க சொல்கிறார். இது குணசேகரனுக்கு வைக்கப்படும் செக் என்று கூட சொல்லலாம்.
ஏனெனில் இப்பொழுது எந்த பக்கமும் அவரால் காய் நகர்த்த முடியாது. இன்னொரு பக்கம் ஜான்சி மானத்தை வாங்கு விடுவார் என்ற பயம் வேறு உள்ளது. ஏனெனில் ஜான்சியிடம் வீடியோ ஆதாரம் வேறு உள்ளது.
இந்நிலையில் தான் குணசேகரன் அருணை கடத்தி வைத்து கொண்டு, கரிகாலனை தாலி கட்ட சொல்வார். ஆனால் ஜனனியும், அப்பத்தாவும் கடைசி நேரத்தில் எப்படியும் அருணை காப்பாற்றி விடுவார். எப்படியும் ஆதிரை திருமணம் சிறப்பாக நடைபெற்று விடும்.